/* */

அந்தியூர் அருகே நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இறப்பு

அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதூரில் தெரு நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இறப்பு
X
தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர் மேற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரது வீட்டிற்கு முன்புறம் கட்டியிருந்த ஆடுகளை வெறித்தனமாக கடித்து குதறியுள்ளது.

இதில், ஏழு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமாருக்கு சொந்தமான மூன்று ஆடுகளையும், துரை மற்றும் பாலு ஆகியோருக்கு சொந்தமான நான்கு ஆடுகளையும், செல்வராஜ் என்பவரது கன்று குட்டியையும் தெரு நாய்கள் கடித்து இறந்தன.இதனால், விவசாயிகளும், ஆடு மாடுகள் வளர்ப்போரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இது மட்டுமின்றி ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களையும் வெறிநாய்கள் கடித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரம்மதேசம் புதூர் பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும், அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 Aug 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க