/* */

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய 3 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது
X

பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்டுரோடு பகுதியில் உள்ள மளிகை கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தமாணிகோம்பை பகுதியை சேர்ந்த 17வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய மூன்று பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மூவரும் சேர்ந்து கடந்த 1ம் தேதி சாமியாபுரம் கூட்டுரோடு பகுதியில் உள்ள மளிகை கடையில் 4ஆயிரம் பணமும்,10 சிகரெட் பாக்கெட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 கம்ப்யூட்டர்களையும் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மூன்று சிறுவர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.


Updated On: 5 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...