திட்டக்குடி அருகே மாமியாருடன் கள்ளத்தொடர்பால் உயிரிழந்த மருமகன்

திட்டக்குடி அருகே மாமியாருடன் கள்ளத்தொடர்பால் உயிரிழந்த மருமகனின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வேல்முருகன். இவருக்கும் வேப்பூரில் உள்ள இவரது பெரியம்மா மகள் குமுதாவின் மகளான பவித்ராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. உறவுமுறையில் அக்காளின் மகளைத் தான் வேல்முருகன் திருமணம் செய்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்து வந்த வேல்முருகன் கடந்த வருடம் தனது சொந்த ஊரான கழுதூர் வந்து பவித்ராவை கோயிலிற்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து 9 மாதங்கள் மட்டும் ஆன நிலையில், பவித்ரா தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அடிக்கடி பவித்ராவை வந்து பார்த்து சென்று கொண்டிருந்த வேல்முருகன் கடந்த 28-10-21 அன்று தனது மனைவியைப் பார்க்க சென்றுள்ளார்.

இரவு 11 மணியளவில் வேல்முருகனின் தாயாருக்கு, தொலைபேசி வாயிலாக வேல்முருகன் இறந்து விட்டாதாகவும், அவரது உடலை வேப்பூர் மருத்துவமனையில் வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகனின் தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் வேல்முருகனின் தாயார் வேல்முருகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அதனை மறைப்பதற்காகவும், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாக கூறி தன் மகனின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வேல்முருகன் தாய் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், தற்பொழுது வேப்பூர் போலீசார் வேல்முருகனின் மாமியார் குமுதா,மனைவி பவித்ரா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் மாமியாருடன் மருமகனுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையொட்டி குமுதாவை வேப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
200 கிலோ தக்காளியை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
ஈரோடு அருகேயுள்ள கிராமத்தில் வேளாண்துறை சார்பில்   வயல் விழா
மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
டிஎச்டிசி நிறுவனத்தில் பல்வேறு பொறியாளர் பணியிடங்கள்
என்ஹெச்பிசி லிமிடெட்டில் பல்வேறு பணியிடங்கள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்கள்
இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் காலிப்பணியிடங்கள்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
ai in future agriculture