/* */

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்

22 யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் . குடியிருப்புக்குள் வராதபடி வனத்துறை கண்காணிப்பு

HIGHLIGHTS

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்
X

கோப்புப்படம் 

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட்டை சுற்றிலும் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப் போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. அண்மைக்காலங்களாக எஸ்டேட் பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி திரிகின்றன.

வால்பாறை அருகே கருமலை எஸ்டேட், ஐயர் பாடி எஸ்டேட், பச்சமலை எஸ்டேட், அப்பர் பாரளை எஸ்டேட் பகுதிகள் உள்ளன.

இந்த பகுதிகளில் 22 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.இவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து, பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

இந்நிலையில் அப்பர் பாரனை எஸ்டேட் வனப்பகுதிக்குள் இந்த 22 யானைகளும் முகாமிட்டிருந்தன. மாலையில் அங்கிருந்து தேயிலைத் தோட்டம் வழியாக புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்தன.

இதனை அப்பகுதி மக்கள் பார்த்து சத்தம் போட்டு ஊருக்குள் வராமல் விரட்டி விட்டனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது.

எனவே குடியிருப்பையொட்டி பகுதிகளில் சுற்றி திரியும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள், அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 8 Dec 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி