/* */

வால்பாறை: காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே, யானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வால்பாறை: காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு
X

யானை தாக்கியதில் உயிரிழந்த மாணிக்கம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டின் காவலாளியாக இருந்தவர் மாணிக்கம்(63). இவர் , இரண்டாவது டிவிசன் பகுதியில் உள்ள டென்னிஸ் கோர்ட் பங்களாவில், நேற்றிரவு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணியை முடிந்துக் கொண்டு வழக்கம் போல் இன்று காலை வீட்டிற்கு மாணிக்கம் வரவில்லை. இதனால், அவரது மனைவி பூங்கா கவலையடைந்து, தேடிச் சென்றுள்ளார். அப்போது, மாணிக்கம் ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்து, கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், உயிழந்தவரின் உடலை கைப்பற்றிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், ஒற்றை காட்டுயானையை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம், வால்பாறை மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Updated On: 4 Jun 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!