பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது

பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது

Coimbatore News-பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது ( கோப்பு படம்)

Coimbatore News- முன்பகை காரணமாக பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய 2 நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆர்.எஸ்.புரம் மண்டல இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் என்பவர் இருந்து வருகிறார். 28 வயதான இவருக்கும் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான எரியீட்டி வேலு என்பவரின் மகன்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் சதீஷ் அந்த இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் ஆர்.எஸ் புரம் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள சதீஷ்குமாரின் அலுவலகத்திற்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதில் இரண்டு கைகளும் துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.எஸ். புரம் காவல் நிலைய காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் எரியீட்டி வேலுவை காவல் நிலையம் அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் எரிய்யூட்டி வேலு மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story