இரிடியம் தருவதாக கூறி ரூ. 2 கோடி மோசடி ; கோவையில் நான்கு பேர் கைது

இரிடியம் தருவதாக கூறி ரூ. 2 கோடி மோசடி ; கோவையில் நான்கு பேர் கைது
X

Coimbatore News- கைது செய்யப்பட்டவர்கள் 

Coimbatore News- இரிடியம் தருவதாக கூறி ரூ. 2 கோடி மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today- கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் முகமது என்பவரின் மகன் அப்துல்லா அஜிஸ் (55). இவருக்கு சொந்தமான நிலம் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ளது. தொழிலதிபரான இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலர் அப்துல் அஜீசை நேரில் சந்தித்து உள்ளனர். அப்போது தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தங்களுக்கு தெரிந்த நபர்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும், உங்களது இடங்கள் எதையாவது விற்க வேண்டும் என்றால் தங்கள் மூலம் விற்று தருவதாகவும் கூறி இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து அப்துல் அஜீஸ் அவர்களுடன் தொடர்ந்து பேசி உள்ளார். பின்னர் கோவைக்கு வந்த அவர் அபூபக்கர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் இரிடியும் போன்ற பொருள் ஒன்றை காண்பித்து உள்ளனர். இது 100% சக்தி வாய்ந்தது என்றும், இதனுடைய விலை இரண்டு கோடி ரூபாய் என்றும் கூறி இருக்கின்றனர். இதனை வாங்கி உடனே விற்றால் 10 கோடி ரூபாய் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதை தொடர்ந்து அப்துல் அஜீஸ் இரண்டு கோடி ரூபாயை அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலரிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர்கள் அந்த பொருளையும் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்து உள்ளனர். இதை தொடர்ந்து அப்துல் அஜீஸ் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அபூபக்கர், ஜான் பீட்டர் , செந்தில்ராஜ், ஜனகன், ஜோதிராஜ், அனில் குமார் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story