/* */

உக்கடம் பெரியகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் செதது மிதக்கின்றன. துர்நாற்றமும் வீசுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் செத்துபோன மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உக்கடம் பெரியகுளம் உள்ளது. சுமார் 327 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தின் கரையோரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளன.

ஆனால், இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதும், குளத்தில் ஆகாயத்தாமரை படர்வதும் குறையவில்லை. இந்நிலையில், ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையம் நோக்கி வரும் கரையோரம் நூற்றுக்கணக்கான மீன்கள் குவியல், குவியல்களாக செத்து மிதந்து கொண்டிருந்தன. மேலும் தூர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மீன்கள் செத்து மிதக்க கழிவு நீர் கலப்பே காரணம். துர்நாற்றம் வீசுவதால் உடனடியாக உயிரிழந்த மீன்களை அகற்ற வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

Updated On: 27 April 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்