/* */

கோவையில் திமுக போட்டியிடுவது கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அமைச்சர் முத்துசாமி

தோழமைக் கட்சி தலைவர்கள், எங்கள் தலைவர்கள் பேசிய பின் எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம்”

HIGHLIGHTS

கோவையில் திமுக போட்டியிடுவது கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அமைச்சர் முத்துசாமி
X

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் சாலை மேம்பாட்டு திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை அமைச்சர் முத்துசாமி இன்று காலை துவங்கி வைத்தார். 

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் சாலை மேம்பாட்டு திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை அமைச்சர் முத்துசாமி இன்று காலை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகராட்சியில்1178 பணிகள் இன்று 100 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்படுகின்றது. இந்த பணிகள் விரைவாக முடிவடைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் அதிக அக்கறையுடன் அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

சிறுவாணி அணையில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் போது சிக்கல்கள் வருகின்றது. அதையும் தாண்டி குடிநீர் வழங்கும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கொடுக்குறேன் என்பதை கொடுத்துவிட்டு பேசினால் மக்கள் நம்புவார்கள். அவர் இன்னும் அதை கொடுக்கவில்லை” எனக் கூறிய அவர், வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தபடும் என்ற விவகாரத்தை சூசகமாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இங்கு வந்து குற்றச்சாட்டு சொல்வது, ஒரு பிரதமர் இப்படி பேசுவது எப்போதும் பார்த்ததில்லை. ஒரு மாநில கட்சியை, ஒரு முதல்வரை, ஒரு கட்சி தலைவரை நேரடியாக வந்து, இல்லாத குற்றச்சாட்டை சொல்வது என்பது அவ்வளவு நாகரிகமானது அல்ல. அவர் பிரதம அமைச்சராக இருப்பதால் இதற்கு மேல் நாங்கள் சொல்வதும் நல்லது அல்ல. பெரிய அரசியல் மேடையாக வைத்துக் கொண்டு அப்படி பிரதமர் பேசக்கூடாது. மக்களுக்கு மூன்றாண்டு காலமாக பல திட்டங்களை முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேள்விக்கு கோவையில் திமுக போட்டியிடுமா என்று கேட்கிறீர்கள் என தெரிவித்த அவர், அதை நேரடியாகவே கேட்கலாமே? தோழமைக் கட்சிகளுடன், தலைமையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தோழமைக் கட்சி தலைவர்கள், எங்கள் தலைவர்கள் பேசிய பின் எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம்” எனத் தெரிவித்தார்.

Updated On: 6 March 2024 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?