/* */

கோவையில் இறைச்சி, மளிகைக்கடைகளில் கூட்டம்: சமூக இடைவெளியுடன் காத்திருந்த மக்கள்!

கோவையில், வழக்கமான நாட்களை விட இன்று, இறைச்சிக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் கணிசமாக அதிகரித்திருந்தது.

HIGHLIGHTS

கோவையில் இறைச்சி, மளிகைக்கடைகளில் கூட்டம்: சமூக இடைவெளியுடன் காத்திருந்த மக்கள்!
X

கோவை நஞ்சுண்டாபுரத்தில் இறைச்சி வாங்குவதற்காக, சமூக இடைவெளியுடன் காத்திருந்த மக்கள். 

தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் உள்ள மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக்கடைகளில் வழக்கமான நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று, வாடிக்கையாளர் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், புளியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி விற்பனையகங்கள் மற்றும் மளிகை கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.

எனினும், ஒருசில இடங்கள் தவிர பெரும்பாலான பகுதிகளில், வாடிக்கையாளர்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிநபர் இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி மற்றும் மளிகைப்பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Updated On: 13 Jun 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’