கோவையில் அக்ரி இண்டேக்ஸ் வேளாண் கண்காட்சி துவக்கம்

கோவையில் அக்ரி இண்டேக்ஸ் வேளாண் கண்காட்சி துவக்கம்

கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள்.

சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி, இன்று துவங்கி 15ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் அக்ரி இண்டேக்ஸ் என்ற வேளாண் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 22 வது சர்வதேச வேளாண் கண்காட்சி இன்று துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி, இன்று துவங்கி 15ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வேளாண் விவசாய பொருட்கள், கருவிகள், நவீன இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வேளாண் நிறுவனங்களும், அதுமட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த நாட்டு மாடுகளும், வெளிநாட்டு வகை ஆடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விதைகள், இயற்கை குளிரூட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தோட்டக்கலை சார்பில் நர்சரிகளும் அமைக்கப்பட்டு பல்வேறு ரக செடிகள், பூச்செடிகள் ஆகியவை விற்பனை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story