/* */

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்க கோரி மனு

இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்க கோரி மனு
X

காதல் திருமணம் செய்த தம்பதி பிரேம்குமார், பாென்மணி.

கரூர் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் நல்லம்மாள் ஆகியோரின் மகன் பிரேம்குமார் (26). இவரும் அதே ஊரைச் சேர்ந்த மொட்டையன் அமராவதி ஆகியோரின் மகள் பொன்மணி (24) என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வேறு நபருடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதியன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை மருதமலை முருகன் கோவிலில் இந்து முறைப்படி சாட்சிகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் செய்து கொண்ட தகவலை தெரிந்து கொண்ட இரு வீட்டு பெற்றோரும் தம்பதியினரை கண்டுபிடித்து ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும், எனவே எங்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், தம்பதியினர் பாதுகாப்பு வேண்டி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Updated On: 15 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்