/* */

இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளாண்ட்: அமைச்சர் தகவல்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கப்படும் : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

HIGHLIGHTS

இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளாண்ட்: அமைச்சர் தகவல்
X

கோவை இ.எஸ்.ஐ மருத்துவனை, கொடிசியா கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கோவை மாவட்டத்திற்க்கு நியமிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் பங்கேற்றார். அப்போது கொரோனா படுக்கை வசதிகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவற்றை குறித்து, இ.எஸ்.ஐ மருத்துவனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வுக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை 830 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவையில் முதல் மற்றும் இரண்டாம் அலையிலும் இதுவரை இந்த மருத்துவமனையில் 17000 பேரை குணப்படுத்தியுள்ளனர். இம்மருத்துவமனையில் உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் சிகிச்சைக்கு ஏற்ப ஆக்சிஜனை குறைத்து பயன்படுத்த வேண்டும். ஆக்ஜிசனைக் தேவைகேற்ப பயன்படுத்தி வீணடிக்காமல் இருப்பதில் இஎஸ்ஐ மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு ஆக்சிஜன் பிளாண்ட்டும், ஒரு சப்ளையரும் உள்ளன. மருத்துவர்களின் கோரிக்கையின் படி கூடுதலாக ஒரு ஆக்சிஜன் பிளாண்ட இங்கு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

Updated On: 15 May 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்