/* */

3 கோவில்களில் நகை திருடிய நபர் கைது

சத்தம் போட அருகிலிருந்தவர்கள் தப்ப முயன்ற நபரை துரத்திப் பிடித்தனர்.

HIGHLIGHTS

3 கோவில்களில் நகை திருடிய நபர் கைது
X

கைது செய்யப்பட்ட நபர்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிகோணம்பாளையததில் கோபால கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை கோவிலை திறந்த பூசாரி கண்ணன் பூஜை செய்து விட்டு நகர்ந்துள்ளார். அப்போது சாமி கும்பிட வந்த நபர் ஒருவர் திடீரென கோவிலை விட்டு வேகமாக நகர சந்தேகமடைந்த கண்ணன் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த தாலிக் காசுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைத்தார். உடனடியாக சத்தம் போட அருகிலிருந்தவர்கள் தப்ப முயன்ற நபரை துரத்திப் பிடித்தனர். இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (38 )என்பதும் அம்மன் கழுத்தில் இருந்த தாலிக்காசை திருடியதும் தெரியவந்தது.

அம்மன் கோவிலில் திருடப்பட்ட சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பகவதியம்மன் மற்றும் கருப்பாரயன் கோவிலை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டதோடு கடந்த வாரத்தில் தங்களது கோவிலில் திருட்டு போனதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் செந்தில்பிரபுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று கோவில்களிலும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைக்களை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் இரண்டு கிராம் தங்கத்தை தவிர மற்ற அனைத்தும் தங்கமுலாம் பூசப்பட்ட நகைகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து செந்தில்பிரபுவை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 11 Jun 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!