/* */

கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்

கோயம்புத்தூரில் வழக்கத்திற்கு மாறாக உள்ள வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, இளநீர், சர்பத் உள்ளிட்ட பானங்களே கை கொடுப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

HIGHLIGHTS

கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
X

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரு நாட்களாக ஈரோடு, சேலம் மாவட்டத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி, இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான பகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேலும், தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக வெயில் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூரில் கடந்த இரு நாட்களில் 104, 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வழக்கத்திற்கு மாறாக உள்ள வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள கோயம்புத்தூர்வாசிகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக, உடல் சூட்டைத் தணிக்க இளநீர், மோர், கம்மங்கூழ் போன்றவற்றை தொடர்ச்சியாக பருகி வருகின்றனர்.

இதில் அதிகமாக வெளியே சுற்றும் மார்க்கெட்டிங் மற்றும் வசூல் பணியில் உள்ளவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு இளநீர், தர்பூசணி உள்ளிட்ட இயற்கை பானங்களே கை கொடுப்பதாக கூறுகின்றனர்.

மேலும், வெயில் குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கோவை என்றாலே குளுமை என்ற பெயர் உண்டு. ஆனால், கடந்த ஒரு மாதமாக கோயம்புத்தூரில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது. ஆனால், வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக வேறு மரங்கள் வளர்க்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

அது தவிர, கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள குளங்களில் தண்ணீர் வற்றி விட்டதால், பறவைகள் குடிப்பதற்கு நீரின்றி அவதிப்படுகின்றன. ஆகவே, வீடுகளில் சிறிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் வைப்பதன் மூலம் பறவைகளின் தாகம் தீர்க்க முடியும்.

மேலும், சூட்டைத் தணிக்க இளநீர், கம்மங்கூழ் போன்ற இயற்கை பானங்கள் அருந்துகிறோம். முன்பு எல்லாம் கோயம்புத்தூர் என்றாலே சில்லென்று இருக்கும் என கூறுவார்கள். ஆனால், தற்போது வெயில் கொடுமையால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றோம் என்று கூறினர்

இதனிடையே, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 April 2024 3:33 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  4. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  8. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  9. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  10. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்