/* */

பொள்ளாச்சி - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து: பயணிகள் அதிருப்தி

மீண்டும் திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

பொள்ளாச்சி - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து: பயணிகள் அதிருப்தி
X

பொள்ளாச்சி ரயில் நிலையம்.

கோவை - திண்டுக்கல் இடையேயான அகல ரயில் பாதை பணிகளுக்கு பிறகு கடந்த 2015ம் ஆண்டு முதல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ரயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பை காரணம் காட்டி திருச்செந்தூர் ரயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

அந்த அறிவிப்பில் வருகிற 15ம் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கும், 16ம் தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கும் ரயில் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் 15ம் தேதி முதல் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்ட தேதி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 14 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?