/* */

போதையில் தகராறு: மகனை கொன்று நாடகமாடிய தந்தை கைது

பொள்ளாச்சி அருகே, போதையில் மகனை அடித்துக் கொன்று நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

போதையில் தகராறு: மகனை கொன்று நாடகமாடிய தந்தை கைது
X

கொலை நடந்த வீடு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி ராமர்கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (50). கட்டிட தொழிலாளி. இவரது மூத்த மகன் செந்தில்குமார் (24) மற்றும் 16 வயதில் இளைய மகன் உள்ளனர். தந்தை கதிர்வேல், மதுபோதையில் இரண்டு மகன்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், தந்தை கதிர்வேல் மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து, கம்பியால் தாக்கியதில் செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தந்தை மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து, மயங்கிய செந்தில்குமாரை தூக்கி அருகில் உள்ள பாலத்தின் அருகே கொண்டு சென்று வீசிவிட்டு வாகன விபத்தில் செந்தில்குமார் காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செந்தில்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில், செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மருத்துவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து, போலீசார் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். இதில், இருவரும் கொலை செய்து நாடகமாடியது உறுதியானது. இதையடுத்து, தந்தை மற்றும் இளையமகன் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கதிர்வேலை கோவை மத்திய சிறையிலும், இளையமகனை உடுமலை கிளைச் சிறையிலும் அடைத்தனர்.

Updated On: 13 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?