/* */

ராணுவ சீருடையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் ராணுவ அதிகாரி

வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த அவர் ராணுவ உடையிலேயே வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து சென்றார்.

HIGHLIGHTS

ராணுவ சீருடையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் ராணுவ அதிகாரி
X

மதுரை விநாயகம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் மதுரை விநாயகம். இவர் 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் ஜாயின் கமிஷன் அதிகாரியாக பணி புரிந்து 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சர்மிளாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த அவர் ராணுவ உடையிலேயே வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து சென்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை விநாயகம், இது நாள் வரை இந்திய நாட்டு எல்லையை பாதுகாத்து வந்ததாகவும் தற்பொழுது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மேலும் சம்பாதிப்பதற்காக வரவில்லை எனத் தெரிவித்தார்.

தற்பொழுது உள்ளவர்களை மூன்று முறை எம்பி ஆக்கினாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினாலும் ஓய்வூதியத்தையும் சம்பளத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள் எனவும் மக்களின் வரிப்பணம் முழுவதும் அவர்களிடம் சென்று விடுவதாக தெரிவித்தார்.
மேலும் நான் வெற்றி பெற்றால் எனது தொகுதி மக்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, உள்ளிட்டவற்றை வசூலிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். மேலும் எனது பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வேன் எனவும் நீர்நிலைத் திட்டங்களை சரி செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 21 March 2024 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?