/* */

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்பு

பெள்ளாதி கிராம கிணற்றில் தண்ணீரில் காட்டுப்பன்றி தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

HIGHLIGHTS

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்பு
X

காட்டுப்பன்றியை மீட்ட வனத்துறையினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பெள்ளாதி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள சுமார் 40 ஆழம் கொண்ட தண்ணீர் கிணற்றில், ஒரு காட்டுப் பன்றி தவறி விழுந்துள்ளது. தண்ணீரில் காட்டுப்பன்றி தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, காட்டுப் பன்றியை கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டு பன்றியை கிணற்றிலிருந்து மீட்டு வெளியே உயிருடன் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட நடுத்தர வயதுடைய ஆண் காட்டுப்பன்றி, நல்ல உடல் நலத்துடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது.

Updated On: 24 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...