/* */

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரியில் 4 மாதத்திற்குப்பின் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

நீலகிரி மலை ரயில்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வரை மலை ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி இன்ஜின் மூலமும், குன்னூர் – உதகை இடையே டீசல் இன்ஜினில் இயக்கப்படுகிறது.

கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை ரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் நீலகிரி மலை ரயில் கவர்ந்து வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மலை ரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் துவங்கியுள்ளது. 4 மாதங்களுக்குப் பிறகு மலை ரயில் தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த கட்டணமே தொடரும் எனவும், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இதன்படி இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கிளம்பிய மலை ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

Updated On: 6 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!