/* */

கோவையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கோவையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
X

விஜயபாஸ்கரின் மாமனார் வீடு.

கடந்த ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி கார்டன் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவின் தந்தை சுந்தரத்தின் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டிலும் இன்று காலை 6 மணி முதல் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்புக்காக வீட்டுக்கு வெளியே போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை வரும் போது இந்த வீட்டில் தங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் தற்போது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’