ஆனைமலை - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த : செல்வப்பெருந்தகை கோரிக்கை

ஆனைமலை - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த : செல்வப்பெருந்தகை கோரிக்கை

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை.

கொங்கு மண்டலத்தில் விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொங்கு பகுதியில் விவசாயிகள் மாநாடு நடத்துகின்றனர். ஆனைமலை நல்லாறு திட்டம் பற்றி மிகப் பெரிய வாதம் நடைபெற்று இருக்கிறது.‌ அதனை நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்ள வந்தேன்.

விவசாயிகளுடைய நலன் காப்பதற்கு பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் பல திட்டங்களை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மாபெரும் திட்டங்கள் உருவாக்கப்பட்டது. பத்தாண்டு காலமாக வேளாண் பெருங்குடி மக்கள் சாலைகளில் போராடும் நிலைகளை பார்த்து வருகிறோம். கடன் சுமையால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைவதற்கு காரணமாக இருந்தது பாஜக.‌ வேளாண் துறை வாழ்க்கையில் விளையாடுகின்றழ பாஜக அரசு. கொங்கு மண்டலத்தில் விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்த இந்த மாநாடு நடைபெறுகிறது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்த ஒரு அறிக்கையும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பவன் கல்யாண் கூறி உள்ளார். அவர் மிகப்பெரிய அதிபுத்திசாலி. அவர்கள் பல அறிக்கை விட்டிருக்கிறார்கள். உண்மை வெளிவர வேண்டும். உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அங்குள்ள பக்தர்களுக்கு தேவை இல்லாத குழப்பத்தை ஆந்திராவின் அரசு ஏற்படுத்துகிறது. அங்கு கொடுக்கப் பட்ட நெய் குஜராத் நெய் என கூறப்படுகிறது. குஜராத்தில் இருந்து நெய் எப்படி வந்தது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story