/* */

இரும்பு வியாபாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

வீட்டின் தரைத்தளத்தில் படுக்கை அறையில் மிளகாய் பொடி தூவி இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

HIGHLIGHTS

இரும்பு வியாபாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
X

லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடக்கும் காட்சி.

கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (44). இவர் தனது மனைவி ஐஸ்வர்யா, மகன் அட்சய கீர்த்தன், மகள் அனு ரூபா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் வெள்ளக்கிணறு பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 3 ம் தேதியன்று தனது குடும்பத்தாருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, இன்று அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் தரைத்தளத்தில் படுக்கை அறையில் மிளகாய் பொடி தூவி இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் லாக்கரில் இருந்த 101 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. லாக்கரில் வெள்ளை பையில் இருந்த 30 பவுன் நகைகள் அப்படியே இருந்துள்ளது. இது தொடர்பாக தினகரன் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  2. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  3. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  4. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  5. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  6. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?