/* */

நூதன முறையில் கடத்திய தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

நூதன முறையில் கடத்திய தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
X

கோயமுத்தூர் விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 26 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ஜாவில் இருந்து கோயமுத்தூர் வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சார்ஜாவில் இருந்து கோவை வந்த பயணிகள் தீவிரமாக கண்காணிக்கபட்டனர். இதில் விமானத்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டதால் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஆசனவாயில் தங்கத்தை பொடியாக்கி பேஸ்டில் கலந்து கடத்தி கொண்டு வந்துள்ளது தெரியவந்தது. மேலும் பிடிபட்டவர்கள் முகமது யாசீர் மற்றும் இர்பான் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 26 லட்ச ரூபாய் மதிப்பிலான 600 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யபட்டது. மேலும் இவர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 March 2021 10:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது