/* */

கோவை மாவட்டத்தில் 23-ம் தேதி முதல் ஜமாபந்தி

ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் 23-ம் தேதி முதல் ஜமாபந்தி
X

ஜமாபந்தி என்பது ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் பிரிட்டிஷாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்.

கோவை மாவட்டத்தில், 11 தாலுகாக்கள் உள்ளன. இதில் ஆனைமலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், கிணத்துக்கடவுவில் டி.ஆர். ஓ. தலைமையிலும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

  • பொள்ளாச்சியில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் முன்னிலையில் 23 முதல் 31-ம் தேதி வரை,
  • வால்பாறையில் டி.ஆர்.ஓ. முன்னிலையில் 23-ம் தேதி மட்டும்,

சூலுாரில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையிலும், மதுக்கரையில் கோவை தெற்கு கோட்டாட்சியர் முன்னிலையிலும், 23 முதல் 30 -ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

  • பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ம் தேதி வரை,
  • மேட்டுப்பாளையத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் முன்னிலையில், 23 முதல் 30-ம் தேதி வரை,
  • அன்னுாரில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 23 முதல் 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
  • கோவை வடக்கு தாலுகாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் 23 முதல், 31-ம் தேதி வரை,
  • தெற்கு தாலுகாவில் 23 முதல் 24-ம் தேதி வரையும் ஜமாபந்தி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத்தல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் ஜமாபந்தியில், காலை 10 மணியளவில் மனு அளிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 May 2023 6:53 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  5. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  6. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  7. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  8. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  10. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்