கோவில்களை திறக்கக்கோரி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

கோவில்களை திறக்கக்கோரி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

தற்கொலைக்கு முயன்ற விஜயா.

தண்டு மாரியம்மன், கோணியம்மன் கோவிலை திறக்க வலியுறுத்தி போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய பெண்.

கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் அவிநாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் முன்பு பூ விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விஜயா, அலுவலக வாயிலில் சாலையில் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த சாணிப் பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் தண்டு மாரியம்மன், கோணியம்மன் கோவிலை திறக்க வலியுறுத்தி போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய அவர், ஆடி மாத உற்சவம் நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களை பூட்டினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், ஆத்தாவுக்கே இந்த நிலையா என ஆதங்கப்பட்டு கூச்சலிட்டார். இதனையடுத்து விஜயாவை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், விசாரணைக்காக பந்தய சாலை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags

Next Story