/* */

ஆக.,15ல் கிராம சபைக் கூட்டங்கள்; கோவை ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு

ஆகஸ்ட் 15 ல் கோவை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆக.,15ல் கிராம சபைக் கூட்டங்கள்; கோவை ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு
X

கோவை ஆட்சியரிடம் மனு அளித்த கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு இன்று வருகை தந்துள்ளார். கோவை வந்த அவர், கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து, கிராம சபைக் கூட்டங்களை முறையாக நடத்தக் கோரி கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி மனு அளித்துள்ளோம். 2020 ஜனவரிக்கு பின்பு கிராம சபை நடக்கவே இல்லாத என்பது தான் எங்கள் குறை. அதை மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளோம். அதனை கலெக்டரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அடுத்த கிராம சபை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கின்றோம். பட்ஜெட்டில் கிராம சபைகளுக்கு என தனி ஒதுக்கீடு குறித்து விளம்பரத்தில் இவ்வளவு கொடுக்கிறோம். இந்த நேரத்தில் கொடுக்கிறோம் என்பதை அறிவிக்க வேண்டும் என்பதையும் விண்ணப்பமாக கொடுத்துள்ளோம். கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை. அதனால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நன்றி நெஞ்சில் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

Updated On: 2 Aug 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...