/* */

பழிக்கு பழியாக கொலை முயற்சி: 10 பேர் கும்பல் கைது

பழிக்கு பழி வாங்குவதற்கு விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

HIGHLIGHTS

பழிக்கு பழியாக கொலை முயற்சி: 10 பேர் கும்பல் கைது
X

கைது செய்யப்பட கருப்பசாமி, பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர்,ராஜ்குமார், கப்பீஸ்குமார்.

கோவையில் கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் அம்மன் குளம் பகுதியில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட தகராறில், வினோத் குமார் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு ஹரிகரன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகவிட்டு வெளியே வந்த போது, கொலை செய்யப்பட்ட வினோத்குமாரின் தந்தை கருப்பசாமி உட்பட 10 க்கும் மேற்பட்டோர் விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் விரட்டி கத்தியால் குத்தினர்.இதில் உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்ட நிலையில் ஹரிகரன், விஜயகுமார் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பந்தயசாலை காவல் துறையினர் பழிக்கு பழி வாங்குவதற்கு விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து கருப்பசாமி மற்றும் பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர்,ராஜ்குமார், கப்பீஸ்குமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 10 பேர் மீதும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் , முறையற்ற தடுப்பு, தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

Updated On: 28 Aug 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?