/* */

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: கோவையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்

கோவையில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் 120 இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், கொரோனா தடுப்பூசி குறைவாகவே கையிருப்பு இருப்பதால், பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

முதலில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பின்னர் அரசு கலை கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கடந்த ஒருவாரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதடனியே, தடுப்பூசி பற்றாக்குறையால், அங்கும் அப்பணி தடைபட்டது. இதனால், அங்கு காத்திருந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். தடுப்பூசி தீர்ந்துவிட்டதால், பொதுமக்களை கலைந்து செல்லுமாறு, போலிசார் வலியுறுத்தினர். இதனால் பல மணி நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Updated On: 4 May 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...