/* */

கோவையில் தகரம் அடைத்து தடுப்பு... தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடுப்பு

கோவையில் கொரோனா பாதித்த தெருவை தகரச்சீட்டினால் அடைக்க எதிர்ப்பு - தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினர் திடீர் போராட்டம்

HIGHLIGHTS

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க, சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் வீதியிலுள்ள ஒருவரின் வீட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் தகரச் சீட்டு அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவித்திருந்தனர்.

ஆனால், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு அந்த வீதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு தகரம் அடைப்பதை கண்டித்து, 15 க்கும் மேற்பட்ட வீட்டினர், திடீர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "ஒரு வீட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு, அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டதால், வெளியே அல்லது வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். கொரோனா பாதித்த வீட்டினை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும். ஒரு தெருவினை தனிமைப்படுத்துவது சரியானது அல்ல" என்றனர்.

Updated On: 4 May 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு