மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

கோவையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக கர்நாடக அரசு காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 65 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசை கண்டித்து மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்காதே,கர்நாடக அரசே தமிழகத்திற்கான தண்ணீரை தடுக்காதே என கண்டன முழக்கங்களை எழுப்பினர்

Tags

Next Story
scope of ai in future