/* */

சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து

பராமரிப்பு பணிகளுக்காக பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து
X

சேலம் கோவை மெமு பயணிகள் ரயில்

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் - கோவை இடையிலான பயணிகள் (மெமு) ரயில் சேவை ஏற்கெனவே இரு மாதங்களாக இயக்கப்படாத நிலையில், நாளை (1-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன்- கோவை சந்திப்பு இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் (மெமு) ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலம் - கோவை இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களும், சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர் - கோவை இடையிலான வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சேலம் - கோவை பயணிகள் (மெமு) ரயில் (எண்.06803) மற்றும் கோவை - சேலம் பயணிகள் (மெமு) ரயில் (எண்.06802) ஆகியவற்றின் சேவை, நாளை (1-ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Feb 2023 3:03 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்