/* */

கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு : உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை

கோவை மாவட்டத்தில் இன்று 12ம் வகுப்பு தேர்வு துவ‌ங்கி, ந‌டைபெற்று வ‌ருகிற‌து .

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு : உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை
X

கோவையில் தேர்வு மையம் ஒன்றில் பிளஸ் டு தேர்வெழுதும் மாணவர்கள். 

தமிழகம் முழுவதும் இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், பொதுத்தேர்வை 35033 மாணவர்கள் எழுதுகின்றனர். இது தவிர 2047 தனி தேர்வர்களும் தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு மையங்க‌ளுக்கு மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வாழ்த்தினர். தேர்வு அறையில் குடிநீர், தடையற்ற மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் வாட்ச், பெல்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு அறைக்கு வெளியே செருப்பு, ஷூ உள்ளிட்டவற்றை கழற்றி விட்டு உள்ளே செல்ல வேண்டும். மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On: 5 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!