/* */

கோவை: தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவையில், கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய, தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

HIGHLIGHTS

கோவை: தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்டத்தில் சமீபத்தில், கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய நான்கு ஊராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நான்கு நகராட்சிகளுக்கான வாக்குசாவடிகள், வார்டு எண்ணிக்கை மற்றும் வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வெளியிட்டார்.

அதன்படி நான்கு நகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 134 வாக்காளர்களும் 159 வாக்கு சாவடிகளும் 108 வார்டுகளும் உள்ளன. கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகள். 49 வாக்கு சாவடிகள். 40,393 வாக்காளர்கள் உள்ளனர்.காரமடை நகராட்சியில் 27 வார்டுகள், 39 வாக்கு சாவடிகள், 30,747 வாக்காளர்களும், கருமத்தம்பட்டி நகராட்சியில் 27 வார்டுகள், 36 வாக்கு சாவடிகள், 30,270 வாக்காளர்களும் உள்ளனர். மதுக்கரை நகராட்சியில் 27 வார்டுகள், 35 வாக்குசாவடிகள், 28,724 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் தற்போது தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 7 நகராட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை