/* */

விசா க‌லாவதியான‌ ஜார்ஜியா நாட்டவர் கைது: சிறையில் அடைப்பு

கோவையில் சுற்றித் திரிந்த விசா க‌லாவதியான‌ ஜார்ஜியா நாட்டவர் கைது செய்யப்பட்டு து சிறையில் அடைக்கப்பட்டார்

HIGHLIGHTS

விசா க‌லாவதியான‌ ஜார்ஜியா நாட்டவர்  கைது: சிறையில் அடைப்பு
X

கோவை பொள்ளாச்சி சாலை kuறிச்சி பிரிவு என்.பி.இட்டேரி பகுதியில் வெளிநாட்டு நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போத்தனூர் போலீசார் அந்த நபரை பிடித்தனர். அப்போது அந்த நபர் போதையில் இருந்துள்ளார். தொடர்ந்து அந்த நபரை அழைத்துச் சென்று விசார‌னை செய்துள்ளன‌ர்

பாஸ்போர்ட், விசா என எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்த அந்த நபர் தனது பெயர் மூர்மன் மும்லேஸ (26) என்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார் .கடந்த ஒரு மாதமாக கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த இடம் பற்றிய விபரம் எதுவும் அவருக்குத் தெரியவில்லை.

தொடர்ந்து போலீசார் எதைக்கேட்டாலும் ஹரஹர சங்கர மஹாதேவா என்று மட்டும் கூறிக் கொண்டிருக்கிறார். மேற்கொண்டு அவரிடம் எந்த விசாரணையும் போலீசாரால் நடத்தமுடியவில்லை.

இதையடுத்து அவரை பற்றி கூடுதல் விபரங்களை கேட்டு மத்திய அரசின் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்திற்கு பிடிபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஜார்ஜியா நாட்டு தூதரகத்துக்கு இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 11 ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்..

Updated On: 20 April 2022 4:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  3. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  6. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  8. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  9. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு