கோவையில் வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய நிதி நிறுவன ஊழியர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களாமேட்டை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மோனிசா (வயது 21). இவர் மேட்டுப்பாளையம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 2022-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். போதிய வருமானம் இல்லாததால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாத தவணை தொகையை எனது கணவரால் கட்ட முடியவில்லை. இந்த நிலையில் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் கடனை கட்ட சொல்லி எனது கணவரை மிரட்டி வந்தனர். இது சம்பந் தமாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். நாங்கள் அங்கு சென்று வருகிற 28-ந் தேதிக்குள் பணத்தை கட்டுவதாக உறுதியளித்து சென்றோம். சம்பவத்தன்று நான் வீட்டில் தனியாக இருந்தேன்.
அப்போது நிதி நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் பேசி பணம் வாங்கும் போது இனிப்பா இருந்துச்சு, இப்ப கசக்குதாடி நாயே என்று பேசினர். மேலும் எனது சுடிதாரை பிடித்து இழுத்து கன்னத்தில் தாக்கி என்னை மானபங்கப்டுத்தினர். பின்னர் அவர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் வரவில்லை என்றால் உன்னையும், உன் புருஷனையும் தொலைத்து கட்டி விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர். எனவே அவர்கள் 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கணவர் வாங்கிய கடனுக்காக வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கி மிரட்டல் விடுத்த நிதி நிறுவன ஊழியரான மேட்டுப்பாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த விஷால் (20) என்பவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஷ், அபிஷேக், தினேஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu