/* */

கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மீண்டும் ரத்து: மக்கள் அதிருப்தி

தொடர்ந்து 5 வது முறையாக கூட்டம் நடைபெறாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மீண்டும் ரத்து: மக்கள் அதிருப்தி
X

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடைசியாக 2023-டிசம்பர் 12ம் தேதி இந்த கூட்டம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து வந்த 4 செவ்வாய்க்கிழமைகளில் இந்த கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறவில்லை. அதன் பின்னர் 15.1.2024 பொங்கல் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை இந்த கூட்டம் நடைபெறுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் நிர்வாக காரணத்தால் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்றும் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை தவிர்த்து பார்த்தல் தொடர்ந்து 5 வாரமாக இந்த கூட்டங்கள் நடைபெறாமல் உள்ளது. வழக்கமாக இந்த கூட்டங்களை மேயர் கல்பனா தலைமை தங்குவார். அவர் இல்லையென்றால், துணை மேயர் வெற்றி செல்வன் தலைமை தங்குவார். அவரும் இல்லாத சமயங்களில்மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர்கள் இந்த கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்பார்கள். ஆனால் தொடர்ந்து 5 வது முறையாக கூட்டம் நடைபெறாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது சுமார் 30 கோரிக்கை மனுக்களாவது மக்களிடம் இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Jan 2024 12:13 AM GMT

Related News