/* */

பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் பேட்டி

24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் பேட்டி
X

பருவமழை முன்னேற்பாடு ஆலோசணைக் கூட்டம்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த, ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாரஸ் அகமது , கோவை மாவட்ட நிர்வாகம் வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை சிறப்பாக எடுத்திருப்பதாகவும், தாலுக்கா வாரியாக பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டிருக்கின்றன எனவும் கூறினார்.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பிரச்சனை இருக்கும் பகுதிகளை நாளை பார்வையிட இருப்பதாகவும் கூறினார். மாவட்டம் முழுவதும் பருவ மழை பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரான் பேசுகையில், வால்பாறை ,மேட்டுப்பாளையம், சிறுமுகை பவானி ஆற்றுப்பகுதி என 21 இடங்கள் குறைவான பதற்றம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், ஏழு நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கி இருப்பதாக தெரிவித்தார். எந்த பிரச்சனை வந்தாலும் உடனே அவர்களுக்கு உதவ முதல் நிலை மீட்பாளர்கள் 1835 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை இருப்பதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும், ஆசிரியர்களும் வரத்தேவையில்லை என்றார். அதே சமயம் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவித்தார். மாநகராட்சிப்பகுதியில் மேம்பாலங்களின் கீழ் மழை நீர் தேங்காமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராஜா கோபால் சுங்காராவும், மாநகரம் மற்றும் மாவட்டங்களில் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாக ஆணையர் தீபக் தாமோதர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினமும் தெரிவித்தனர்.

Updated On: 10 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு