/* */

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை

கிண்டல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில், வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை
X

அசோக்குமார்.

கோவை காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (26). அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், அசோக்குமார் சம்பவத்தன்று இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இவர்களுக்குள் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த வாலிபர்கள் நேற்று அசோக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. அப்போது வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அசோக்குமார் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 6 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்