/* */

மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு
X

உயிரிழந்த கூலித்தொழிலாளி அருண்.

திருவொற்றியூர் அடுத்த மணலி அருகே சடையங்குப்பத்தை சேர்ந்தவர் அருண் (47), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு சரண்யா(20) என்ற மகளும், சரண் (19) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஏரியில் அருண் குளிக்கச் சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அதில் சேற்றில் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் அருகே உள்ள கிராமத்திற்கு தகவல் தெரிவித்து, பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தாங்காடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் அருகே உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 30 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...