கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை
X

அமைச்சர் ஆவடி நா.மு.நாசர்

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நா.மு. நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமைகத்தில் பொது மக்களுக்கு விலை குறைக்கப்பட்ட பாலை அமைச்சர் நாசர் விநியோகம் செய்தார். அப்போது பேசிய அவர், கலைஞரின் வழியில் பொறுப்பு எடுத்தவுடனேயே, 5 திட்டங்களை மக்களுக்காக அர்ப்பணித்தவர் முதலமைச்சர் .

உற்பத்தியை பெருக்கி, விற்பனையை அதிகரித்து ஆவின் பால் விலை குறைப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட உள்ளோம். முதலமைச்சர் தன்னுடைய முதல் கையெழுத்திலேயே பால் விலையை குறைத்தது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது .

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலையில் ஆவின் பாலை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture