/* */

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

தமிழ்நாட்டில் 4.88 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
X

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 1 கோடி ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 98.3% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15,74,477 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து தமிழகத்தில் அதிகமான சோதனை செய்யப்பட்ட மருத்துவமனையாக ராஜீவ்காந்தி மருத்துவமனை விளங்குகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 1001 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர், தற்போது 207 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 2.87 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசி செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Aug 2021 1:17 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை