அரபுமொழி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..!

செங்குன்றம் ஆயிஷா பள்ளிவாசலில் அரபு மொழி பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அரபுமொழி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..!
X

அரபுமொழி பயின்று பட்டம் பெறும் மாணவர்கள்.

செங்குன்றம் ஆயிஷா பள்ளிவாசலில் அரபுமொழி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் ஆயிஷா ஹிஃப்லு மத்ரஸாவின் முதலாவது பட்டமளிப்பு விழா மற்றும் ஆயிஷா மகளிர் அரபுக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி ஆயிஷா மஸ்ஜித் தலைமை இமாம் காஜா மொய்னுதீன் ஜமாலி தலைமையில் செங்குன்றம் ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் ஆயிஷா மஸ்ஜித் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், சுற்றுவட்டார மஸ்ஜித்களின் நிர்வாக பெருமக்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மலப்புரம் ஈஸ்ட் பைனான்ஸ் செகரட்டரி ஷிகாபுத்தீன் அஹ்தல் ஹாஷிமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரபு மொழியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி கௌரவித்தார். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி முடித்து பட்டம் பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை ஃகைருள் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷா உலவி, அடையார் அரபுக் கல்லூரியின் முதல்வர் சதீதுத்தீன் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோருக்கு ஆயிஷா மஸ்ஜித் சார்பில் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் ஆயிஷா மஸ்ஜித் துணை இமாம் அபுல் ஹஸன் பிலாலி நன்றியுரை ஆற்றினார்.

Updated On: 20 Aug 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர்
  3. நத்தம்
    நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!
  4. திருவள்ளூர்
    கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
  5. திருவள்ளூர்
    குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
  6. திருவள்ளூர்
    வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
  7. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
  8. தென்காசி
    தென்காசியில் டிச.9 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட...
  9. தென்காசி
    குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!
  10. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி...