Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
பொது போக்குவரத்துக்கு அனுமதி? ஊரடங்கு தளர்வு குறித்து ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை
ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது போக்குவரத்துக்கு அனுமதி தருவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த, கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும், வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 21-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதனை நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை, சென்னையில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் குறித்து இந்த ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.