/* */

இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் -சென்னை ஆணையர் பிரகாஷ் அதிரடி

இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் -சென்னை ஆணையர் பிரகாஷ் அதிரடி
X

நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்யும் நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாளிகையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாவட்டஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நாளை மே 6ஆம் தேதி வரக்கூடிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காசிமேடு மற்றும் கோயம்பேடு வளாகங்களை தீவிரமாக கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்யும் நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 May 2021 9:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  7. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  9. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  10. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு