விருதுநகரில் அரசு ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி, ரொக்க பணம் கொள்ளை

விருதுநகரில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை மருத்துவமனை சென்று வந்த ஒரு மணி நேரத்திற்குள் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

Update: 2022-04-28 07:50 GMT

விருதுநகர் அருகே எட்டநாயக்கன்பட்டி, டீச்சர்ஸ் சேட்டிலைட் டவுணை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் ஜெகதீசன். இவர் தனது மனைவி கஸ்தூரியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக சூலக்கரைக்கு வெளியே சென்றவர்கள் திரும்பி 1 மணி நேரத்திற்குள் திரும்பியுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கேட்டு உடைக்கப்பட்டு, கதவை உடைத்து உள்ளே திறந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஜெகதீசன் விருதுநகர் சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மருத்துவமனை சென்று வந்த 1 மணி நேரத்திற்குள் கைவரிசையை காட்டிய கொள்ளையர்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சமீப காலமாக புதுமுக நபர்கள் சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News