விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

Update: 2021-06-16 06:30 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண் இயக்குநராக மாற்றப்பட்டார், இதனையடுத்து தமிழக அரசு மோகன் ஐஏஎஸை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளது,

இன்று அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக அவரை  முன்னாள் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய மாவட்ட ஆட்சியருக்கு உயர் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News