விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 304 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 304 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது, 524 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2021-06-13 14:21 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,341 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர்  உயிரிழந்துள்ளார். இதுவரை 308 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 524 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 36,645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,

மீதமுள்ள 3,388 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News