விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 41 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து இன்று 41 பேர் குணமடைந்தனர்; 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

Update: 2021-08-04 14:21 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,967 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் கூட உயிரிழப்பு இல்லை,இதுவரை 341 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

புதன்கிழமை மட்டும் 41 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 43,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 363 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News