விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மெல்ல உயருகிறதா?

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்த தொற்று தற்போது மெல்ல உயர்வதாக மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது

Update: 2021-09-23 15:14 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 45,315 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் மட்டும் இறப்பு, இதுவரை 353 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று மட்டும் 18 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,740 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 222 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று 17 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 26 பேருக்கு உறுதியானதால், கொரோனா தொற்று தற்போது மெல்ல உயர்வதாக மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது

Tags:    

Similar News